நாட்டில் இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின்வெட்டு நேரத்தில் திடீர் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று இரவு ஒரு மணி நேரம் மாத்திரமே மின்வெட்டினை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அடுத்த வார மின்வெட்டு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்
தேவை குறைந்ததாலும், அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் இயங்குவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த வாரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் விதம், கிடைக்கப்பெறும் வளங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.